தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 7, 2022, 4:36 PM IST

Updated : Sep 7, 2022, 4:50 PM IST

ETV Bharat / city

மாமனாருக்கு மருமகன் போட்ட சதிதிட்டம்... விஷம் கலந்த மதுவால் மரணம்..

பொள்ளாச்சி அருகே சொத்துக்காக மாமனாருக்கு விஷம் வைத்த மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாமனாருக்கு மருமகன் போட்ட சதிதிட்டம்
மாமனாருக்கு மருமகன் போட்ட சதிதிட்டம்

கோவை:நெகமம் அடுத்த பொன்னாக்காணி பகுதியைச்சேர்ந்தவர் வேலுச்சாமி (56), விவசாயி. அதே பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (58), கூலித்தொழிலாளி. இருவரும் நேற்று(செப்.05) முன்தினம் நெகமம் அடுத்துள்ள பனப்பட்டியில் இருந்து பொன்னாக்காணி செல்லும் பகுதியில் அமர்ந்து மது அருந்தினார். அப்போது இருவரும் சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இருவரும் குடித்தது போலி மதுவா? அல்லது கள்ளச்சாரயமா? என்ற கோணத்தில் நெகமம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து விசாரணையில் பலியான மனோகரன் அவருக்கு சொந்தமான தோட்டம் ஒன்றை விற்று கையில் பணம் வைத்துள்ளார். தோட்டம் விற்ற பணத்தை கொண்டு நண்பர்களுடன் மது குடித்து ஜாலியாக இருந்ததாக கூறப்படுகிறது.

அதே பகுதியைச் சேர்ந்த சத்தியராஜ் மனோகரனின் மகள் மாசிலாமணியை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. தனது மாமனாரான மனோகரன் குடித்து கும்மாளமிடுவது சத்தியராஜ்-க்கு பிடிக்கவில்லை. மனோகரன் தனது மருமகன் என்ற உரிமையில் சத்தியராஜிடம் மது வாங்கி குடித்துள்ளார்.

இதனை சாதகமாக பயன்படுத்த எண்ணிய சத்தியராஜ்க்கு விபரீதமான எண்ணம் தோன்றியுள்ளது. மாமனாரிடம் இருக்கும் பணத்தை கைப்பற்ற எண்ணிய சத்தியராஜ். நேற்று முன்தினம் மதுவில் விஷம் கலந்து வைத்துள்ளார். பின்னர் மாமனார் மனோகரன், மருமகன் சத்தியராஜிடம் வழக்கம் போல மது கேட்டு உள்ளார்.

அப்போது விஷம் கலந்த மதுவை மனோகரனிடம் மருமகன் சத்தியராஜ் கொடுத்ததும், அதை மனோகரன் வாங்கிக்கொண்டு, தனது உறவினரான வேலுச்சாமியுடன் தோட்டத்தில் மது அருந்தி உயிரிழந்ததும், காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து நெகமம் காவல் நிலைய காவல்துறையினர் சத்யராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பணத்திற்காக மாமனாரை, மருமகன் மதுவில் விஷம் வைத்து கொன்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:மனைவி கண் முன்னே ரவுடி வெட்டிக் கொலை.. நீதிமன்றத்தில் இருவர் சரண்...

Last Updated : Sep 7, 2022, 4:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details