தமிழ்நாடு

tamil nadu

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைதான 3 பேரின் நீதிமன்ற காவல் நீடிப்பு!

By

Published : Jan 20, 2021, 3:42 PM IST

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான மூன்று பேருக்கு பிப்ரவரி மூன்றாம் தேதிவரை நீதிமன்ற காவல் நீட்டித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

pollachi case accused custody extended till Feb 3
pollachi case accused custody extended till Feb 3

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடையதாக மேலும் அருளானந்தம், பாபு, ஹெரன்பால் ஆகிய மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்து ஜனவரி ஆறாம் தேதி கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது, அவர்கள் மூன்று பேருக்கும் ஜனவரி 20ஆம் தேதிவரை நீதிமன்ற காவல் வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து அவர்கள் மூவரும் கோபி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று (ஜன. 20) மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கினை விசாரித்த மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவி, மூவருக்கும் பிப்ரவரி மூன்றாம் தேதிவரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க...குட்கா முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் ரமணா உள்பட 30 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

ABOUT THE AUTHOR

...view details