தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இளம் பெண்ணிற்கு மிரட்டல் - காவலர் கைது - கோயம்புத்தூர் குற்ற செய்திகள்

பொள்ளாச்சியில் இளம்பெண்ணிற்கு மிரட்டல் விடுத்த, சென்னை ஆயுதப்படை காவலரை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

இளம் பெண்ணிற்கு மிரட்டல்
இளம் பெண்ணிற்கு மிரட்டல்

By

Published : Nov 28, 2021, 11:08 AM IST

பொள்ளாச்சி:சென்னையைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் நேசமணி, இவருக்கும் பொள்ளாச்சியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளாக ஃபேஸ்புக்கில் நண்பர்களாகப் பழகி உள்ளனர். இந்நிலையில் அப்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயமானதால் இருவரும் பிரிந்துள்ளனர்.

அதன்பின் காவலர் நேசமணி, பெண்ணிடம் பழகியபோது எடுத்த புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவுசெய்து பெண்ணை மிரட்டியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து புகாரின்பேரில் காவல் துறையினர் விசாரணை செய்ததில் நேசமணி பெண்ணை மிரட்டியது விசாரணையில் தெரியவந்தது. பெண் வன்கொடுமைச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி காவலர் நேசமணியை சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:குளிர்காலக் கூட்டத்தொடர்: சுமுகமாக நடத்துவது குறித்து அனைத்துக் கட்சி ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details