தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 26, 2020, 8:10 PM IST

ETV Bharat / city

ரூ.60 லட்சம் மதிப்பீட்டிலான கால்நடை மருத்துவமனைக்கு அமைச்சர் அடிக்கல்!

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் கோலார்பட்டியில் ரூ.60 லட்சம் மதிப்பில் கால்நடை மருத்துவமனைக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்.

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

கோயம்புத்தூர் மாவட்டம், உடுமலை சட்டப்பேரவைத் தொகுதி, பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம், கோலார்பட்டியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருத்துவமனை, ஆவலப்பம்பட்டியில் ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருந்தக கட்டடம் ஆகியவை அமைக்கும் பணிகள் இன்று (நவ.26) தொடங்கின.

அதில் கலந்துகொண்ட கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார். இதில், மாவட்ட கால்நடைத் துறை இணை இயக்குநர் பெருமாள் சாமி, பொதுப்பணித் துறை கட்டுமான செயற்பொறியாளர் ரங்கநாதன், பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் இளஞ்செழியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:பொது மக்களுக்கு வீடு தேடி வழங்கும் நடமாடும் ரேஷன் பொருள்கள் - உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி

ABOUT THE AUTHOR

...view details