தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 26, 2020, 6:07 PM IST

ETV Bharat / city

ஜல்லிக்கட்டு நடக்கும் இடங்கள் குறித்து விரைவில் அறிவிப்பு!

கோவை: மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்து ஆலோசித்த பின் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும் இடங்கள் குறித்து உரிய அறிவிப்பு வெளியாகும் என கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

radhakrishnan
radhakrishnan

பொள்ளாச்சியை அடுத்த ஜமீன் ஊத்துக்குளி, சூளேஸ்வரன்பட்டி, சின்னாம்பாளையம், ஊஞ்சவேலம்பட்டி, சோழபாளையம், மாக்கினாம்பட்டி ஆகிய ஊராட்சிகளில், 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் குறித்த அதிமுக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், “ தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும் பகுதிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்தபின், கால்நடை பராமரிப்புத்துறை மூலம் உரிய அறிவிப்பு வெளியிடப்படும். ஜல்லிக்கட்டுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன “ என்றார்.

ஆட்சியர்களுடன் ஆலோசித்த பின் ஜல்லிக்கட்டு!

இதையும் படிங்க: அழகிரியை தவிர்த்துவிட்டு திமுக ஆளுங்கட்சியாக வர முடியாது - அமைச்சர் செல்லூர் ராஜு

ABOUT THE AUTHOR

...view details