கோவை விமான நிலையத்தில் ஜுனட் யூசப் ஷேக், அஸிம் சஜீத் குரேஷி ஆகிய இரண்டு பயணிகள் சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் கோவை வந்தடைந்தனர்.
அவர்கள் தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு வருவதாக டி.ஆர்.ஐ அலுவலர்களுக்கு துப்பு கிடைத்துள்ளது. அதன்படி, அலுவலர்கள் அவர்களை சோதனை செய்ததில் அந்த பயணிகளிடமிருந்து மறைத்து பொட்டலம் வடிவில் வைக்கப்பட்டிருந்த தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.