தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 1, 2020, 2:33 AM IST

ETV Bharat / city

அரசு மருத்துவமனை கழிவறையில் இறந்த நிலையில் பெண்குழந்தை கண்டெடுப்பு!

கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கழிவறையில் இறந்த நிலையில் பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கழிவறையில் குழந்தை
கழிவறையில் குழந்தை

கோயம்புத்தூர்: கோவை அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வெளி நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். அதே போல் விபத்து, நோய் தொற்று காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று (நவ.30) அங்குள்ள அதிதீவிர சிகிச்சை பிரிவு கழிவறையில், பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை இறந்த நிலையில் இருப்பது தெரிய வந்தது. இதைனைத் தொடர்ந்து அக்குழந்தையின் உடலை மருத்துவமனை ஊழியர்கள் கழிவறையிலிருந்து மீட்டனர்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட இந்தப் பெண் குழந்தை விபத்து மற்றும் அதி தீவிர சிகிச்சை பிரிவு கழிவறையில் எப்படி வந்தது யாருடைய குழந்தை என பல்வேறு கட்டங்களில் விசாரணை மேற்கொள்கின்றனர்.

இதையும் படிங்க:கௌடண்யா ஆற்றில் மூழ்கி தாய், இரு மகள்கள் உயிரிழப்பு !

ABOUT THE AUTHOR

...view details