கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயில் மலைப்பகுதியில் அமைந்துள்ளதால் அவ்வப்போது யானைகள் நடமாட்டம் காணப்படும்.
இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு சுவாமி தரிசனத்திற்காக ஏராளமானோர் படிக்கட்டுகள் வழியாக மலை ஏறிக் கொண்டிருந்தனர். அப்போது இடும்பன் கோயில் அருகே திடீரென வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றை யானை படிக்கட்டுகள் வழியாக கீழே இறங்க ஆரம்பித்தது.