தமிழ்நாடு

tamil nadu

குற்றாலத்தில் குளிக்கத் தடை

By

Published : Sep 9, 2021, 3:18 PM IST

கோயம்புத்தூர் குற்றாலம் நீர்வீழ்ச்சியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை குற்றாலம்
கோவை குற்றாலம்

கோயம்புத்தூர்மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கோயம்புத்தூர் குற்றாலம் நீர்வீழ்ச்சிக்கு செல்ல, சுற்றுலாப் பயணிகளுக்கு மே மாதம் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நான்கு வாரங்களுக்கு பிறகு, செப்.6ஆம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வருவதால், குற்றாலம் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், இன்று (செப்.9) முதல் 12ஆம் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் விதித்தார். இதனால் அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதையும் படிங்க:கனமழை: குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம்!

ABOUT THE AUTHOR

...view details