தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வழிவிடுவதில் ஏற்பட்ட வாக்குவாதம்; கட்டட கரண்டியால் ஆட்டோ ஓட்டுநர் அடித்து கொலை  - அதிர்ச்சி வீடியோ

கோவை: சாலையில் வழிவிடுவது குறித்து எழுந்த வாக்குவாதத்தில் ஆட்டோ ஓட்டுநரை, இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் கட்டட வேலைக்குப் பயன்படுத்தும் கரண்டியால் சரமாரியாக தாக்கியதில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார்.

By

Published : Sep 28, 2019, 10:41 PM IST

Updated : Sep 29, 2019, 3:28 PM IST

coimbatore Auto driver murder video

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அருண்பிரசாத். இவர் அப்பகுதியில் சொந்தமாக ஆட்டோ ஓட்டும் தொழில் செய்துவருகிறார். இந்நிலையில், சரவணம்பட்டியிலிருந்து கீரணத்தம் பகுதிக்கு தன் ஆட்டோவை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் அருண் பிரசாத்தின் ஆட்டோவை முந்தும்போது பிரச்னை தொடங்கியுள்ளது.

ஆட்டோ டிரைவரை கரண்டியால் தாக்கும் காட்சி

அது தொடர்பாக இருவருக்கும், அருண் பிரசாத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வாக்குவாதம் முடிந்து அருண்பிரசாத் தனது ஆட்டோவை டீக்கடைக்கு அருகில் நிறுத்தியுள்ளார். அங்கேயும் வந்த இரு நபர்கள் அருண் பிரசாத்தை கட்டட பணிக்கு பயன்படுத்தும் கரண்டியால் கடுமையாக தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர். தாக்குதலில் நிலைகுலைந்த அருண்பிரசாத் அங்கேயே மயங்கிவிழுந்தார்.

இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு முதலுதவி சிகிச்சையளித்தபின், தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் பாதி வழியிலேயே அருண் பிரசாத்தின் உயிர் பிரிந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவில்பாளையம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அருண் பிரசாத்தை கட்டட கரண்டியால் தாக்கியதால், இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் கட்டட தொழிலாளியாக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர். அவர்களின் வாகன எண்ணைக் கொண்டும் காவல் துறையினர் வலைவீசி தேடிக் கொண்டிருக்கின்றனர்.

Last Updated : Sep 29, 2019, 3:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details