மோட்டார் வாகன சட்டப்படி, இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற 18 வயது பூர்த்தியாக வேண்டும் என்பது விதி. ஆனால் ஒரு சில பள்ளி மாணவர்கள், ஓட்டுநர் உரிமமின்றி பள்ளிக்கு இருசக்கர வாகனங்களில் செல்வது தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், கோவை மாவட்டம் ஆலந்துறை பகுதியில் 15 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவர் ஒருவர், விவசாயத்துக்கு பயன்படுத்தும் டிராக்டரை ஓட்டிச் சென்றது மற்ற வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. மேலும், தனது நண்பர்களையும் அழைத்துக்கொண்டு கனரக வாகனங்கள் செல்லும் சாலையில் டிராக்டரை ஓட்டிவந்தது மற்ற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்தது.