தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 24, 2020, 5:30 PM IST

ETV Bharat / city

4 வயது குழந்தைக்குப் பாலியல் தொல்லை : வாட்ச்மேன் கைது!

கோவை : நான்கு வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த காவலாளி போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை பாலியல் தொல்லை வழக்குகள்  தமிழ்நாடு பாலியல் வழக்குகள்  கோவை போக்சோ கைது  A Watchman Arrested Under Pocso Act In Coimbatore  Coimbatore Pocso Arrest  Pocso Arrest  TamilNadu Sexual Harassments Cases  Coimbatore Sexual Harassment Cases
Coimbatore Pocso Arrest

கோவை மாவட்டம், சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் கடந்த 10 நாள்களாக ரவிச்சந்திரன் (வயது 57) என்பவர் காவலராகப் பணிபுரிந்து வந்தார்.

நேற்று (நவ.23) மாலை அக்குடியிருப்பில் உள்ள குழந்தைகள் வழக்கம்போல் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், அக்குடியிருப்பைச் சேர்ந்த நான்கு வயது குழந்தை ஒருவரை காவலாளி ரவிச்சந்திரன் அழைத்துச் சென்று, காவலாளி அறையில் வைத்து பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

தொடர்ந்து இதுகுறித்துத் தெரிய வந்து அதிர்ச்சியடைந்த அக்குழந்தையின் தந்தை, காவலாளி ரவிச்சந்திரனைப் பிடித்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் காவல் துறையில் ஒப்படைத்தார்.

இதையடுத்து ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர், ரவிச்சந்திரன்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேருந்து ஓட்டுநர் கைது!

ABOUT THE AUTHOR

...view details