தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிறுமி பாலியல் வன்புணர்வு - இளைஞர் கைது! - சிறுமி பாலியல் வன்புணர்வு

14 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டவர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறுமி பாலியல் வன்புணர்வு
சிறுமி பாலியல் வன்புணர்வு

By

Published : Feb 13, 2022, 10:44 PM IST

சென்னை:மயிலாப்பூர் தர்மராஜா கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த 11ஆம் தேதி காணாமல்போனதாக அவரின் பெற்றோர் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து மகளிர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞருடன் 14 வயது சிறுமி சென்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து காவல் துறையினர் கண்ணகி நகர் பகுதியில் உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்த இளைஞரை என்பவரைக் கைதுசெய்து, பின்னர் சிறுமியை மீட்டு காவல் நிலையம் அழைத்துவந்து சோதனை மேற்கொண்டனர்.

அதன்பின் நடத்திய விசாரணையில், அந்த இளைஞர் 14 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தைகள் கூறி பலமுறை பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்தது. இதையடுத்து இளைஞர் மீது போக்சோ சட்டத்தில்கீழ் வழக்குப்பதிந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:லிவ் - இன் உறவில் சேர்ந்து வாழ்ந்த காதலர்கள் தீக்குளிப்பு

ABOUT THE AUTHOR

...view details