தமிழ்நாடு

tamil nadu

தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் - பத்திரமாக மீட்டு சிறையில் அடைத்த போலீஸ்

By

Published : Jul 16, 2022, 8:49 PM IST

குரோம்பேட்டையில் உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இளைஞருக்கு சிறை
இளைஞருக்கு சிறை

சென்னை:குரோம்பேட்டை துர்கா நகர், பச்சைமலை பகுதியைச் சேர்ந்தவர் விஜய் என்ற மாரி (20). இவர் அப்பகுதியில் உள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி நேற்று (ஜூலை 15) தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த குரோம்பேட்டை காவல் துறையினர், சுமார் ஒன்றரை மணி நேரமாகப் போராடிய பின்னர் தாம்பரம் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் அவரை பத்திரமாக மேலே ஏறி மீட்டனர்.

தற்கொலை செய்யப் போவதாக மிரட்டிய இளைஞருக்கு சிறை

பின் அவர், தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறையினர் பிடியிலிருந்து தப்பித்து ஓட முற்பட்டு பொதுமக்களால் விரட்டிப் பிடிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டார். இவரின் விபரீதமான இந்த செயலின் பின்னணியில் அவருக்கு, வீட்டை விற்று பணம் கொடுக்கவேண்டும் என தற்கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதனால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு 2 மணி நேரம் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

தற்கொலை எதற்கும் தீர்வைத் தருவதில்லை

முன்னதாக இதே மின் கோபுரத்தில், நேற்று காலை கிஷோர் என்பவர் காதல் விவகாரத்தில் திருமணம் செய்து வைக்க கோரி ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து சிறை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நான் போலீஸ்... டிக்கெட் எடுக்க தேவையில்லை - பேருந்தில் வாக்குவாதம் செய்யும் காவலரின் வீடியோ வைரல்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details