சென்னை:குரோம்பேட்டை துர்கா நகர், பச்சைமலை பகுதியைச் சேர்ந்தவர் விஜய் என்ற மாரி (20). இவர் அப்பகுதியில் உள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி நேற்று (ஜூலை 15) தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த குரோம்பேட்டை காவல் துறையினர், சுமார் ஒன்றரை மணி நேரமாகப் போராடிய பின்னர் தாம்பரம் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் அவரை பத்திரமாக மேலே ஏறி மீட்டனர்.
பின் அவர், தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறையினர் பிடியிலிருந்து தப்பித்து ஓட முற்பட்டு பொதுமக்களால் விரட்டிப் பிடிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டார். இவரின் விபரீதமான இந்த செயலின் பின்னணியில் அவருக்கு, வீட்டை விற்று பணம் கொடுக்கவேண்டும் என தற்கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதனால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு 2 மணி நேரம் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.