தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 7, 2019, 7:09 PM IST

ETV Bharat / city

இரண்டு நாட்களில் நிச்சயதார்த்தம் - இளம்பெண் தற்கொலை!

சென்னை: கோயம்பேடு பகுதியில் இரண்டு நாட்களில் நிச்சயதார்த்தம் நடக்கவிருந்த நிலையில் இளம் பெண் திடீரென்று தூக்கு மாட்டி தற்கொலை கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

இளம்பெண் தற்கொலை

சென்னை கோயம்பேடு சின்மயாநகரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(60). இவருடைய மகள் பிரியங்கா (29). பிரியங்காவுக்கு வருகின்ற 9ஆம் தேதியன்று நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்றிரவு தன்னுடைய வீட்டில் பிரியங்கா தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். அவரது தந்தை ராமகிருஷ்ணன் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது தனது மகள் தூக்கு மாட்டி இறந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே கோயம்பேடு காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் பிரியங்காவுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால் மன உளைச்சலில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார் என்று தெரியவந்தது. மேலும் பிரியங்காவின் தந்தை ராமகிருஷ்ணனிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு நாட்களில் நிச்சயதார்த்தம் ஆக இருந்த பெண் திடீரென்று தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details