சென்னை: கரோனா தொற்று பரவல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்து, அதனை கடைபிடிக்கக்கோரி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் காவல் துறையினர், அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில், சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் நின்றிருந்த இளம்பெண் ஒருவர், முகக்கவசம் அணியாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
பெண்ணிடம் விசாரணை
அப்போது, ரயில் நிலைய நடைமேடையில் பணியில் இருந்த பயண சீட்டு பரிசோதகர், முகக்கவசம் அணியாமல் நின்றிருந்த பெண்ணுக்கு அபராதம் விதித்தார்.
அதற்கு அந்த இளம்பெண் டிக்கெட் பரிசோதகருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் நடைமேடையில் பாதுகாப்பு பணிக்காக இருந்த பெண் ஆர்.பி.எப் வீரர்கள் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி கொண்டிருந்தனர்.