சென்னை:மலேசியா, தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து கடத்தல் கும்பல் சென்னைக்கு விமானங்களில் பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தனிப்படை அமைத்து சென்னை விமான நிலையத்துக்கு நேற்று (ஜூன்28) வரும் அனைத்து வெளிநாட்டு விமான பயணிகளையும் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த, ராமநாதபுரத்தைச் சோ்ந்த முகமது முகமது ஹனிபா(32), என்ற பயணியையும், அதைப் போல், தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் வந்த சென்னையைச் சோ்ந்த முகமது ஆசிக்(38) என்பவரையும் நிறுத்தி சோதனை செய்தனா்.