சென்னை: ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (மே.22) மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு: முதலமைச்சர் நாளை ஆலோசனை! - ஊரடங்கு நீட்டிப்பு
தமிழ்நாட்டில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
![மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு: முதலமைச்சர் நாளை ஆலோசனை! will lockdown extend in tamilnadu](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11841136-37-11841136-1621586632995.jpg)
will lockdown extend in tamilnadu
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையிலான முழு ஊரடங்கை தமிழ்நாடு அரசு அமல்படுத்தியது.
இருப்பினும், தொற்றின் வேகம் கணிசமாக குறையாததால், மே 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை(மே.22) மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இதையடுத்து ஊரடங்கு நீட்டிப்பிற்கான அறிவிப்பு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.