தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 24, 2022, 9:38 AM IST

Updated : May 24, 2022, 3:51 PM IST

ETV Bharat / city

பூட்டிய வீட்டில் நிர்வாணமாக இறந்து கிடந்த கணவர் - 2 நாள்களாக சடலத்துடன் வாழ்ந்த மனைவி

சென்னையில் பூட்டப்பட்ட வீட்டில் நிர்வாணமாக இறந்து கிடந்த கணவருடன், மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி இரண்டு நாள்களாக அவரின் சடலத்தோடு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Naked man Death
Chennai Naked man Death

சென்னை: புரசைவாக்கம் வைக்கோகாரன் தெருவில் அசோக் பாபு (53) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பத்மினி (48) என்ற மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி உள்ளார். இத்தம்பதிக்கு, ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகன் வெளியூரில் வேலை பார்த்து வர, திருமணமான இவரது மகள் தனது கணவரின் குடும்பத்தோடு பெங்களூருவில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், மகள் ஆர்த்தி கடந்த இரு நாள்களாக தனது தந்தை அசோக் பாபுவுக்கு போன் செய்துள்ளார். ஆனால், அவர் செல்ஃபோனை எடுக்காததால், நேற்று (மே 23) போலீசாருடன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, பூட்டை உடைத்து உள்ள சென்று பார்த்தபோது, அசோக் பாபு நிர்வாணமாக இறந்து கிடந்துள்ளார். அருகில் அசோக் பாபுவின் மனைவி பத்மினி (48) இறந்துபோன அசோக் பாபுவையே பார்த்துக் கொண்டு இருந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த வேப்பேரி காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மனநலம் பாதிக்கப்பட்டு இரு தினங்களாக கணவனின் உடலுடன் வாழ்ந்து வந்த அசோக் பாபுவின் மனைவி பத்மினியை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த மரணம் தொடர்பாக வேப்பேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வாழைப்பழத்தால் வந்த வினை - காதல் கணவரை கொலை செய்த மனைவி கைது

Last Updated : May 24, 2022, 3:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details