தமிழ்நாடு

tamil nadu

விஜயகாந்த் இன்று இரண்டாவது நாளாக பிரச்சாரம்!

By

Published : Mar 25, 2021, 8:28 PM IST

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று அக்கட்சியின் எழும்பூர் மற்றும் திரு.வி.க நகர் தொகுதிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

vijayakanth
vijayakanth

எழும்பூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் பிரபு மற்றும் திரு.வி.க நகர் தொகுதி வேட்பாளர் சேகர் ஆகியோரை ஆதரித்து, தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று இரண்டாவது நாளாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது புளியந்தோப்பு பகுதியில் தேமுதிக தொண்டர்கள் அவரை பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக வரவேற்றனர்.

பிரச்சார வாகனத்தில் வந்த விஜயகாந்த், அதில் நின்றபடியே கூடியிருந்த கட்சியினரை பார்த்து கையசைத்தார். இதனால் கட்சித் தொண்டர்களும் உற்சாகமாயினர். ஆனால், விஜயகாந்த் எதுவும் பேசாமலேயே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

விஜயகாந்த் இன்று இரண்டாவது நாளாக பிரச்சாரம்!

கும்மிடிப்பூண்டியில் நேற்று தனது பிரச்சாரத்தை தொடங்கிய விஜயகாந்த், அப்போதும் தொண்டர்கள் மத்தியில் பேசாமல் கையசைத்த படியே சென்றார் என்பது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க:'அதிமுகவினர் டோக்கன் விநியோகித்து வாக்குச் சேகரிப்பு' - எம்எல்ஏ சேகர்பாபு புகார்

ABOUT THE AUTHOR

...view details