தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல்நலக்குறைவு காரணமாக இன்று (மே.19) அதிகாலை 3 மணியளவில் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தேமுதிக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விஜயகாந்துக்கு கரோனா தொற்று இல்லை - தேமுதிக தலைவர் விஜயகாந்த்
19:50 May 19
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மேற்கொண்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தேமுதிக தலைமைக்கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. ஓரிரு நாட்களில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார். மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்" எனக் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து விஜயகாந்த் மேற்கொண்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு கரோனா பாதிப்பு இல்லையென்பது தெரியவந்துள்ளது.