சென்னை: தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு பணிக்கான கால்நடை உதவி மருத்துவர் பதவிக்கு தேர்வு எழுதியவர்களில் 1,907 நபர்களுக்கு நேர்காணல் நடைபெறுகிறது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2019-2020ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு பதவிக்கான கால்நடை உதவி மருத்துவர் பதவியில் 1,141 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெற்ற தேர்வினை 2015 பேர் எழுதினர்.