இது தொடர்பாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஞானசேகரன் தொடர்ந்துள்ள வழக்கில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள் ஆகியோர் செல்லும் இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பொதுமக்கள் நடமாட்டமும் தடுக்கப்படுவதாக மனுவில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கரோனா பரவலை தடுக்கும் நோக்கில் பள்ளி, கல்லூரிகள், நீதிமன்றம் ஆகியவற்றில் மக்கள் கூட தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபானக்கடை, திரையரங்கம், மால் ஆகியவற்றில் மக்கள் கூடி வருவதாகவும், அதேபோல பரப்புரை கூட்டங்களிலும் கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் ஒன்று கூடுவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் போக்குவரத்தை தடுத்து நிறுத்தாமல் பரப்புரைகளை மேற்கொள்ள அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் அவர் கோரிக்கை வைத்திருந்தார்.