தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

‘மத்திய அரசு மக்களுக்காக சிந்திக்கவில்லை’ - உதயகுமார் காட்டம் - சு.ப. உதயகுமார்

சென்னை: கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பச்சைத் தமிழகம் அமைப்பின் தலைவர் சு.ப. உதயகுமார், மத்திய அரசு மக்களுக்காக சிந்திக்கவில்லை என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

உதயகுமார்

By

Published : Aug 31, 2019, 10:30 AM IST

பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் 'இந்தியாவின் அணு கொள்கை மாற்றப்பட்டு வருகிறதா?’ என்ற தலைப்பில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் தமிழ்தேசிய விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த தோழர் தியாகு, பச்சைத் தமிழகம் தலைவர் உதயகுமார், பத்திரிகையாளர் பன்னீர்செல்வம், பேராசிரியர் அச்சின் வானியக் உள்ளிட்டோர் கருத்துகளை தெரிவித்து பேசினர். கருத்துரங்கின் இறுதியில் அனைவரும் ஒன்றிணைந்து #WeStandWithNBA என்னும் வாசகம் அடங்கிய பதாகையை ஏந்தி அணு ஆயுத போருக்கு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

அப்போது, சு.ப.உதயகுமார் பேசுகையில், இங்கு அணு ஆயுத போர் நடந்தால் உலகம் முழுவதும் பரவாது என எந்த உத்திரவாதமும் இல்லை என்றும், தற்போதைய அரசு மக்களுக்காக சிந்திக்கவில்லை எனவும் சாடினார்.

சென்னையில் கருத்தரங்கம்

மேலும், இப்படிப்பட்ட மோசமான நிலையில் உள்ள இந்தியாவில் உடனடியாக ஒரு சமாதான மக்கள் இயக்கம் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், அந்த இயக்கம் மூலம் எந்த சூழ்நிலையிலும் அணு ஆயுதம் பயன்படுத்த மாட்டோம் என உறுதி எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details