தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பொல்லாதவன் பட பாணியில் இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது - குற்றச் செய்திகள்

சென்னை அருகே இருசக்கர வாகனம் திருடிய நபரை காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொல்லாதவன் படம் பாணியில் இருசக்கர வாகனம் திருடியவர் கைது
பொல்லாதவன் படம் பாணியில் இருசக்கர வாகனம் திருடியவர் கைது

By

Published : Aug 15, 2021, 10:56 PM IST

சென்னை: எம்.கே.பி நகரைச் சேர்ந்தவர், ஜோசப். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 13ஆம் தேதி இரவு வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

மறுநாள் காலை சென்று பார்த்தபோது வாகனம் காணாமல் போனதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து ஜோசப், இருசக்கர வாகனம் காணாமல்போனது குறித்து எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவுசெய்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற நபர் ரெட்ஹில்ஸ் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட காவலர்களால் கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து அவரை எம்.கே.பி நகர் காவலர்களிடம் ஒப்படைத்தனர்.

பொல்லாதவன் படம் பாணியில் வாகனத்தைத் திருடிய நபர் ரெட்ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த முகமது சாதிக் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 'கோவில்பட்டியில் அரிவாள் வெட்டு: மகன் உயிரிழந்த நிலையில் தாயாருக்கு தீவிர சிகிச்சை'

ABOUT THE AUTHOR

...view details