சென்னை புதுப்பேட்டை நரியங்காடு காவலர் குடியிருப்பில் வசித்து வரும் காவலர், காவல் ஆணையர் தலைமையகத்தில் துணை ஆணையருக்கு கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் வசித்து வந்த காவலர் குடியிருப்பில், நுங்கம்பாக்கத்தில் பணிபுரிந்த காவலர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்த குடியிருப்பில் வசித்து வந்த ஓட்டுநரான இவருக்கும் கரோனா தொற்று பரவியிருக்க வாய்ப்பு இருப்பதால், ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சென்று ரத்த மாதிரி பரிசோதனை செய்து வந்தார். அதன் முடிவில், துணை ஆணையரின் ஓட்டுநரான இவருக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளார்.