சென்னை: அம்பத்தூர் அருகே உள்ள மண்ணூர்பேட்டை பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மகேஷ் கண்ணன் (27). அதே பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி இரவு பணிமுடித்துவிட்டு வீடுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மதுபோதையில் வந்த இருவர் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் கீழே கிடந்த கல்லை எடுத்து அவர் மீது தாக்குதல் நடத்தினர்.
இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் மகேஷ் கண்ணன் புகார் அளித்தார். அதனடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது. மண்ணூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த தினேஷ், மணிகண்டன் என்பது தெரியவந்தது.