தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 30, 2022, 10:26 PM IST

ETV Bharat / city

அடுத்த 2 நாள்களுக்கு சென்னையில் பவர்-கட் நிலவரம்!

மின் பராமரிப்புப் பணி நடைபெறுவதால், சென்னையில் அடுத்த இரண்டு நாள்களுக்கு (மார்ச் 31, ஏப்ரல் 1) மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

Two Days Power Shutdown in Chennai
Two Days Power Shutdown in Chennai

சென்னை: தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நாளை (மார்ச் 31) சென்னையில் உள்ள சிலப்பகுதிகளில் பராமரிப்புப்பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெரம்பூர், புழல் துணைமின் நிலையங்களில் கீழ்க்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்புப்பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். அதன்படி புழல் பகுதி பத்மாவதி நகர், லட்சுமி நகர், இந்திரா நகர், கிரெஸ் நகர், வி.எம்.கே நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (ஏப். 1) அன்று சென்னையில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்புப்பணி காரணமாக தாம்பரம், அடையாறு - காந்திநகர் , போரூர் , கிண்டி, செம்பியம், தண்டையார்பேட்டை - காலடிப்பேட்டை துணைமின் நிலையங்களில் கீழ் உள்ள இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்புப்பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். மின்வெட்டு ஏற்படும் பகுதிகள் குறித்த விவரம்:

தாம்பரம் பகுதி: கடப்பேரி ஆர்.பி ரோடு பகுதி வேல்முருகன் தெரு, சரஸ்வதி நகர் ஈ.டி.எல் காமக்கோடி நகர், எ.ஜி.எஸ் களி, வி.ஜி.பி சாந்தி நகர், சர்ச் அவென்யூ, காந்தி தெரு மற்றும் இதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

அடையாறு / காந்திநகர் பகுதி: காமராஜ் அவென்யூ 1 மற்றும் 2 தெரு, கே.பி நகர் 4 , 7, 8 மெயின் ரோடு , இந்திரா நகர் 7 முதல் 15 வரை குறுக்குத்தெரு மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகள்.

போரூர் பகுதி:பூந்தமல்லி, ஜெ.ஜெ நகர், லீலாவதி நகர், ஆவடி மெயின் ரோடு ஒரு பகுதி, காவனூர் பொன்னியம்மன் நகர் , சின்ன தெரு, நடைப்பாதை தெரு, சேக்கிழார் நகர் , ஒண்டி காலணி , சரவணா நகர் , திருப்பதி நகர், மேத்தா நகர் காரம்பாக்கம், ஆர்.இ நகர், ஆபிசர் காலனி, ஆற்காடு ரோடு ஒரு பகுதி, கெருகம்பாக்கம், சுலோச்சானா நகர், பூமாதேவி நகர், லட்சுமி நகர், குன்றத்தூர் மெயின் ரோடு, மணப்பாக்கம் ஆர்.இ. நகர், கிருஷ்ணா நகர், சித்தார்த் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் இதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

கிண்டி பகுதி: மடிப்பாக்கம், மடுவான்கரை, ஆண்டாள் நகர், இந்திரா நகர், திலகர் அவென்யூ மற்றும் இந்த இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

செம்பியம் பகுதி: தணிகாசலம் நகர், சுந்தரமூர்த்தி தெகு, எத்திராஜ் தெரு, செல்லம் நகர், காமராஜர் சாலை மூலக்கடை சந்திப்பு, ஜம்புலி தெரு, நேதாஜி நகர், மணலி நெடுஞ்சாலை ரோடு, அம்பிகா நகர், லட்சுமியம்மன் கோயில் நெரு, பார்வதி நகர் , செந்தில் நகர் மற்றும் இந்த இடங்களை சுற்றி உள்ள பகுதிகள்.

தண்டையார்பேட்டை / காலடிப்பேட்டை பகுதி: டி.எச். ரோடு பகுதி, ராஜாக்கடை, எல்லையம்மன் கோயில் தெரு, எண்ணூர் எக்ஸ்பிரஸ் ரோடு, திலகர் நகர், பி.கே. என் காலனி மற்றும் இந்த இடங்களில் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அசோக் செல்வனின் "மன்மத லீலை" - நிபந்தனையுடன் வெளியிட அனுமதி

ABOUT THE AUTHOR

...view details