சென்னை: ஆவடியைச் சேர்ந்தவர் ஒட்டுநர் செல்வம்(36). இவரது மனைவி சுமலதா(29). இவர்களுக்கு ஆதிரன்(4), கவுசிக்(2), மற்றும் ஒரு கைக்குழந்தையும் உள்ளது.
இவர்களது உறவினர்கள் நேற்று சபரி மலைக்குச் செல்வதால் மகாலிங்க புரத்தில் உள்ள கோயிலுக்கு குடும்பத்தினருடன் அவர்களை வழியனுப்பி விட்டு வீட்டிற்கு திரும்பினார்கள்.
இதில் அனைவரும் காரில் வருவதற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில் சங்கர் மட்டும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்குச் செல்வதாகக் கூறியதையடுத்து அவரது இரு பிள்ளைகளும், தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் செல்வதாகக் கூறியதால் இரண்டு மகன்களையும் செல்வம் மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார்.
சிறுவர்கள் உயிரிழந்த சோகம்
மதுரவாயல் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்று கொண்டிருந்த மூன்று சக்கர சைக்கிளின் மீது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி மோதியதால், சாலையில் மூவரும் சாய்ந்தனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரியின் சக்கரத்திற்குள் மாட்டி ஆதிரன், கவுசிக் ஆகிய இருவரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்கள்.