தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பயிற்சி முடித்த காவலர்களின் சத்திய பிரமாண விழா! - 407 புதிய உத்திரபிரதேச காவலர்களுக்கு பயிற்சி

சென்னை: ஆவடியில் மத்திய ரிசர்வ் காவல் படை பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற 407 காவலர்களின் சத்திய பிரமாண விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

சென்னையில் சிஆர்பிஎப் வீரர்களின் சத்திய பிரமாண விழா
சென்னையில் சிஆர்பிஎப் வீரர்களின் சத்திய பிரமாண விழா

By

Published : Dec 16, 2019, 8:29 PM IST

சென்னை ஆவடியில் மத்திய ரிசர்வ் காவல் படை பயிற்சி முகாமில் பயிற்சியை முடித்த 407 உத்திரபிரதேச காவலர்களின் சத்திய பிரமாண விழா நடைபெற்றது.

டி.ஐ.ஜி பிரவீன் சி.காக் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு 407 உத்திரபிரதேச காவலர்களுக்கு 24 வார கடின பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சியில் நவீன ஆயுதங்களை கையாளுதல், குண்டெறிதல், துப்பாக்கி சுடுதல், தீவிரவாத நடவடிக்கையை முறியடித்தல், யுத்தகலை மேலாண்மை, பொது அறிவு உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இந்த பயிற்சிகளை மேற்கொள்ள தேவையான துப்பாக்கி சுடும் மைதானம், நவீன வசதிகள் கொண்ட உடற்பயிற்சி கூடம். ஒடுதளம், நீச்சல் குளம் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. இந்த பயிற்சியில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற 5 காவலர்களுக்கு கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதை தொடர்ந்து வீரர்களின் துப்பாக்கி பயிற்சி, கரகம், மல்கம் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இதையும் படிங்க:

கிறிஸ்துமஸ் நேரங்களில் மட்டுமே வெளிச்சமாகும் வாழ்வாதாரம்!

ABOUT THE AUTHOR

...view details