சென்னை: பொங்கல் பண்டிகை வரும் 14ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, 12, 13 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள்- கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், மாதவரம் புதிய பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி மாநகராட்சி பேருந்து நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம், கே. கே. நகர் பேருந்து நிலையம் ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படவுள்ளன.
கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம்
நாகப்பட்டினம், திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நாகர்கோவில், திருவனந்தபுரம், விழுப்புரம், அரியலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இங்கிருந்து பேருந்துகள் செல்லும்.
மாதவரம் புதிய பேருந்து நிறுத்தம்
ஆந்திர மாநிலத்துக்குச் செல்லும் பேருந்துகளும், ஆந்திர மாநில பேருந்துகளும் இங்கிருந்து செல்லும்.
பூந்தமல்லி மாநகராட்சி பேருந்து நிலையம்