சென்னை தீவுத்திடலில் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலாத் துறை சார்பில் பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் அதேபோல் பொருட்காட்சி நடத்த அரசு ஏற்பாடு செய்துள்ளது. சென்னை தீவுத்திடல் பொருட்காட்சியில் 28 மாநில அரசுத் துறைகள், 16 மாநில பொதுத் துறை நிறுவனங்கள், இரண்டு மத்திய அரசு நிறுவனங்கள், நான்கு பிற மாநில அரசு நிறுவனங்கள், இந்திய செஞ்சிலுவைச் சங்கம், தமிழ்நாடு சட்ட உதவி மையம் உள்பட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பொருட்காட்சி தொடர்ந்து 70 நாள்கள் வரை நடைபெறும் எனத் தெரிகிறது. அலுவலக நாள்களில் மாலை 3 மணியிலிருந்து இரவு 10 மணி வரையும் விடுமுறை நாள்களில் காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணி வரையும் பொருட்காட்சியைப் பார்க்க முடியும். நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு 35 ரூபாயும் சிறுவர்களுக்கு 20 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
காப்பான் படம் வெளிக்கொணர்ந்த கதை: பூச்சித் தாக்குதல்... உருவானதா? உருவாக்கப்பட்டதா?