தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 2, 2020, 9:06 PM IST

ETV Bharat / city

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9pm

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ.

top-10-news-at-9pm
top-10-news-at-9pm

எஸ்பிபியின் நினைவிடம் - சனி, ஞாயிறு பார்வையிட அனுமதியில்லை!

திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கத்தில் மறைந்த பிரபல பாடகர் எஸ்பிபியின் நினைவிடத்தைப் பார்வையிட சனி, ஞாயிறு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘அப்பாவின் வழியில் சமூக, அரசியல் பணியை தொடர்வேன்’ - விஜய் வசந்த்...!

கன்னியாகுமரி: அப்பாவின் வழியில் சமூகப் பணியையும், அரசியல் பணியையும் தொடர்ந்து செய்வேன் என வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

கிராம சபை கூட்டம் நடத்திய ஸ்டாலின் மீது வழக்கு

தமிழ்நாடு அரசின் உத்தரவை மீறி, திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத 4,327 உள்ளாட்சி அமைப்புகள்!

நாட்டில் 4 ஆயிரத்து 327 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தூய்மை பாரதம் (ஸ்வச் பாரத்) திட்டத்தின் கீழ் திறந்த மலம் கழித்தல் இல்லாததாக அறிவித்துள்ளன.

ஹத்ராஸ் பெண்ணின் வழக்கில் களமிறங்கிய நிர்பயா வழக்குரைஞர்!

லக்னோ : கும்பல் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த ஹத்ராஸ் பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்காமல் போக மாட்டேன் என நிர்பயா வழக்கை நடத்திய வழக்குரைஞர் சீமா குஷ்வாஹா உறுதி தெரிவித்தார்.

அடல் சுரங்கப் பாதை அருகே 100 மீ. உயர புத்தர் சிலை!

புதிதாக அமையவுள்ள அடல் சுரங்கப்பாதை அருகே 100 மீ. உயர புத்தர் சிலை ஒன்றை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

3 வயது பெண் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்த சிறுவன் கைது!

உனா: 3 வயதான பிஞ்சு குழந்தை 11 வயது சிறுவனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரைப்படமாக உருவாகும் இந்தியாவின் சூப்பர் ஹீரோ 'சக்திமான்'!

மும்பை: 'சக்திமான்' தொடரை தற்போது திரைப்படமாக எடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த தோனி!

ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகள் விளையாடிய நபர் என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி படைத்துள்ளார்.

லிபியாவில் 7 இந்தியர்கள் கடத்தல்!

லிபியாவில் இரும்பு வெல்டிங் பணிக்கு சென்ற ஏழு இந்தியர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details