தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 25, 2020, 9:28 AM IST

ETV Bharat / city

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-at-9am
top-10-news-at-9am

எஸ்பிபி நலமாக உள்ளார்? மருத்துவமனையிலிருந்து நேரடி தகவல்!

சென்னை: எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்பிபியின் உடல்நிலை, சிகிச்சை நிலவரம் குறித்து மருத்துவமனையில் இருந்து நமது செய்தியாளர் பகிர்ந்து கொள்கிறார்.

கால்நடை மருத்துவமனைகளை சீரமைக்க ரூ.1,140 கோடி தேவை - மத்திய அமைச்சரிடம் கோரிக்கை

மத்திய அரசு 60 விழுக்காடு நிதியினை கொடுக்க வேண்டும் எனவும், தமிழ்நாட்டிலுள்ள கால்நடை மருத்துவமனைகளை சீரமைக்க 1,140 கோடி ரூபாய் நிதியை வழங்க வேண்டும் எனவும்; மத்திய அமைச்சரிடம் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கோரிக்கை வைத்ததார்.

தற்சார்பு வார்த்தை அல்ல; வாழ்க்கை... சொந்த செலவில் குட்டை அமைத்து விவசாயம் செய்யும் கிராமம்!

நாமக்கல்: வறண்டு கிடந்த கிராமத்தையும், விவசாயத்தையும் காக்க ரூ. 9 லட்சம் மதிப்பில் 2 ஏக்கர் நிலம் வாங்கி குட்டை வெட்டிய கிராம மக்கள், தற்சார்பை வெறும் வார்த்தையாக அல்லாமல் வாழ்க்கையாக வாழ்ந்துகாட்டி வருகின்றனர்.

கிசான் திட்ட போலி விவசாயிகள்- விரட்டும் சிபிசிஐடி !

சென்னை: கிசான் திட்டத்தில் மோசடியாக பணம் பெற்ற போலி விவசாயிகள் யார் யாரென வேளாண்துறை, சிபிசிஐடியிடம் பட்டியல் ஒப்படைத்துள்ளது.

எஸ்பிபி நலம் பெற சல்மான் கான் பிரார்த்தனை

மும்பை: பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் மீண்டு வர வேண்டி நடிகர் சல்மான் கான் காத்திருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

முன்னெப்போதும் இல்லாத சூழலில் இந்தியா-சீனா உறவு : வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

இந்தியா-சீனா உறவு முன்னெப்போதுமில்லாத நெருக்கடியான சூழலைச் சந்தித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

விமானப் பயணத்தில் லக்கேஜ் கட்டுப்பாடுகளுக்கு இனி தளர்வு

விமானப் பயணதின் போது பயணிகள் லக்கேஜ் கொண்டு செல்ல இனி கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை என விமானப் போக்குவரத்துதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு கலவரம் தொடர்பான விசாரணையைத் தொடங்கிய என்ஐஏ...!

காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் அகந்த சீனிவாஸின் உறவினர் பதிவிட்ட ஃபேஸ்புக் பதிவால் ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி இரவு பெங்களூருவில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பான இரண்டு வழக்குகளில் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை செய்து வருகிறது.

13வது ஐபிஎல் தொடரில் முதல் சதம் - ராகுல் சாதனை

துபாய்: 13ஆவது ஐபிஎல் தொடரில் முதல் சதத்தை விளாசினார், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல். ராக்

உய்கர் இஸ்லாமியர்களை ஒடுக்க 380 சிறை முகாம்கள் நடத்தும் சீனா

2017ஆம் ஆண்டிலிருந்து சுமார் 380க்கும் மேற்பட்ட சிறை முகாம்களை ஜிங் ஜியாங் மாகாணத்தில் சீன அரசு அமைத்துள்ளதாக ஆஸ்திரேலிய நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது.

ABOUT THE AUTHOR

...view details