தமிழ்நாடு

tamil nadu

மாலை 5 மணி செய்திச்சுருக்கம் Top 10 News @ 5PM

By

Published : Oct 31, 2021, 5:30 PM IST

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம்.

Top 10 News @ 5PM
Top 10 News @ 5PM

1.டாஸ்மாக் பார் திறப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்: ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

டாஸ்மாக் பார்கள் திறப்பது குறித்து தமிழ்நாடு அரசு மறு பரிசீலனை செய்யவேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

2.இல்லம் தேடி கல்வி திட்டத்தால் பள்ளிக்கல்வி பாதிக்காது: அமைச்சர் மகேஷ் தகவல்

இல்லம் தேடி கல்வி திட்டத்தால் பள்ளிக் கல்வியில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

3.மனிதநேயமிக்க அரசாணை - முதலமைச்சருக்கு கி. வீரமணி பாராட்டு

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்வதைத் தவிர்க்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அரசாணை மனிதநேயம் மிக்க அறிவிப்பாகும் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

4.புதிய கல்விக் கொள்கை திட்டத்தை தொடர்ந்து எதிர்ப்போம் - கனிமொழி எம்பி

புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது என்ற கொள்கையில் இருந்து முதலமைச்சர் மாறப்போவது கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

5.தமிழ்நாட்டில் நாளை முதல் புதிய தளர்வுகள்!

தமிழ்நாட்டில் திரையரங்குகள், பேருந்து பயணம் ஆகியவற்றில் அறிவிக்கப்பட்ட தளர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

6.மழைக்காலத்தில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்!

மழைக்காலத்தில் மின்சார விபத்து ஏற்படும்போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து காண்போம்.

7.வருங்கால பைக் சாம்பியன் - குட்டித் தல புகைப்படம்

நடிகர் அஜித் தனது நீண்ட தூரம் பைக் பயணத்தை முடித்து கொண்டு வீடு திரும்பியுள்ளார். அஜித்தின் ஹெல்மெட்டை மகன் ஆத்விக் அணிந்தபடி இருக்கும் புகைப்படம் வைராகி வருகிறது.

8.புதுச்சேரியில் திரையரங்கில் 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி

புதுச்சேரியில் திரையரங்கில் 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க அனுமதியளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

9.கே.வி.ஆனந்த் பிறந்தநாள் - நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட நண்பர்கள்

மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்தின் பிறந்த நாளையொட்டி அவரது நண்பர்கள் ஒன்றுகூடி நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

10.குழந்தையின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கொடூர தந்தை!

தன் ஏழு வயது பெண் குழந்தையின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த தந்தையை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details