தமிழ்நாடு

tamil nadu

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம் Top 10 News @ 3 PM

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்..

By

Published : Aug 2, 2021, 3:01 PM IST

Published : Aug 2, 2021, 3:01 PM IST

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்
பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்

1. தனியார் பள்ளி மாணவர் சேர்க்கைக்கு கால நீட்டிப்பு?

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் ஆரம்ப வகுப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்க நாளை (ஆக. 3) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் கால நீட்டிப்பு வழங்குவதற்கு வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

2. தமிழ்நாடு வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

3. மீனவர்கள் பாதுகாப்பில் அண்ணாமலை வீண் பெருமை - ஆளூர் ஷா நவாஸ் ஆவேசம்

பிரதமர் மோடி ஆட்சியில் ஒரு மீனவர் மீதுகூட துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ள நிலையில், வீண் பெருமை பேசாமல் மீனவர்களைக் காப்பாற்றுங்கள் என ஆளூர் ஷா நவாஸ் தெரிவித்துள்ளார்.

4. தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு

தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் நீலகிரி, கோயமுத்தூர் மாவட்டங்களின் மலைப் பகுதிகள், வட கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

5. டெங்குவைத் தடுக்க தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகள் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

டெங்கு நோயைத் தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் தீவிர நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6. 3ஆவது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபா கைது

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பதிவு செய்யப்பட்ட மூன்றாவது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபா இன்று மீண்டும் கைது செய்யப்பட்டார்.

7. புகழ் சேர்த்த இடத்தில் கருணாநிதியின் பொன்னோவியம் - நெகிழும் வைரமுத்து

எந்த இடம் இனத்திற்கும், மொழிக்கும் புகழ் சேர்த்த இடமோ அந்த இடத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படம் வைக்கப்படுவதாக கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார்.

8. பி.வி. சிந்துவுக்கு நாடாளுமன்றத்தில் பாராட்டு!

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று சாதனைபுரிந்துள்ள வீராங்கனை சிந்துவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

9. நாட்டிற்காக பதக்கம் வென்றது மட்டற்ற மகிழ்ச்சி - சிந்துவின் தந்தை நெகிழ்ச்சி

நாட்டிற்காக சிந்து பதக்கம் வென்றது மட்டற்ற மகிழ்ச்சி அளிப்பதாக அவரது தந்தை ரமணா தெரிவித்துள்ளார்.

10. 3டியில் வெளியாகும் 'பெல் பாட்டம்' திரைப்படம்!

'பெல் பாட்டம்' திரைப்படம் 3டியில் வெளியாகவிருப்பதாக படத்தின் நாயகன் அக்‌ஷய் குமார் அறிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details