தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? - தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு

சென்னை: தனியாரிடம் மின்சாரம் வாங்கியதால் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கோடி தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் மீண்டும் மின்கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் அமைப்பின் தலைவர் சா.காந்தி
தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் அமைப்பின் தலைவர் சா.காந்தி

By

Published : Oct 25, 2020, 12:42 PM IST

தமிழ்நாடு மின்சார வாரியம் நிர்வாக சீர்திருத்தம் என்னும் பெயரில் பணியாளர்கள் குறைப்பு, தனியார் நிறுவன பராமரிப்பிற்கு அனுமதி வழங்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டுவருகிறது. அவை மத்திய அரசின் மின்சாரத் திருத்தச் சட்டத்தை மறைமுகமாக அமுல்படுத்துவது போல் உள்ளது என்று மின்துறை பொறியாளர்கள் சங்கம் குற்றம்சாட்டி உள்ளது.

மத்திய அரசும், மின்சார வாரியத்திற்கு ஏற்பட்டுள்ள கடனை அளிக்க பல்வேறு நிபந்தனைகளை வகுத்துவருகிறது. அதனை தமிழ்நாடு மின்சார வாரியமும் படிப்படியாக அமல்படுத்தி பணிகளை தொடங்கிவிட்டது. இந்த நிலையில் மின்சார வாரியத்தின் கடனுக்கு தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் வாங்கியதுதான் காரணம் என்னும் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பு வெளியிட்டுள்ள காணொலி

இதுகுறித்து தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் அமைப்பு, "தமிழ்நாடு மின்சார வாரியம் 4 தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிலிருந்து கடந்த 12 ஆண்டுகளில் 4035.5 கோடி யூனிட் மின்சாரத்தை கொள்முதல் செய்துள்ளது.

அதன் மூலம் தனியார் நிறுவனங்கள் அடைந்த லாபம் ரூ.29 ஆயிரத்து 307 கோடி. தனியார் மின்சார உற்பத்தி நிறுவனத்திடமிருந்து மின்சாரம் வாங்குவதில் ஒரு யூனிட் மின்சாரம் சாம்பல்பட்டியில் ரூ.23.76 ரூபாய்க்கும், மதுரை பவர் நிறுவனத்தில் 26.17 ரூபாய்க்கும், பிள்ளைபெருமாநல்லூர் மின்சார உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து 21.80 ரூபாய்க்கும் வாங்கப்பட்டுள்ளது. இதற்கான விலையில் வேறுபாடுகள் உள்ளன” என குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் அமைப்பின் தலைவர் சா.காந்தி ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போது ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கோடி கடனில் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் 20 ஆண்டுகளாக தமிழ்நாடு மின்சார வாரியம் தனியாரிடம் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்ததுதான். இந்த நஷ்டத்தை ஈடுகட்ட மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என கூறுகிறார்கள்.

தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் அமைப்பின் தலைவர் சா.காந்தி

மின்சாரக் கட்டணம் கடந்த 2000ஆம் ஆண்டில் யூனிட் 2 ரூபாய் 18 காசுகளாக இருந்தது. இன்று 5 ரூபாய் 50 காசுகளாக அதிகரித்துள்ளது. இந்திய அளவில் தமிழ்நாடு மின்சார வாரியம் மிகக் குறைந்த அளவில் மின் இழப்பை கொண்டுள்ளது. அதே நேரத்தில் விற்கப்படும் மின்சாரத்திற்கு உரிய கட்டணத்தையும் முழுவதும் வசூலித்து விடுகிறது.

எனவே மின்சார வாரியத்தின் செயல்பாடுகளில் எந்த குறையும் இல்லை. தனியாரிடமிருந்து வாங்கப்பட்ட மின்சாரம் தான் அதன் இழப்பிற்கு காரணம். எனவே இதற்கு பொறுப்பு மக்களோ, தொழிலாளர்களோ இல்லை" எனத் தெவித்தார்.

இதையும் படிங்க:கோயில் நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்

ABOUT THE AUTHOR

...view details