இது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் மறைவு செய்தி தனக்கு மிகுந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர். மேலும் ஒரு வெற்றிகரமான வணிகராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தவர்.
நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினராக 2006ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை இருந்தவர். அவரின் இழப்பு தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பாகும்.