சென்னை:காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட 35 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சாதாரணத் தேர்தல்களுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும், ஏனைய 28 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நிரப்பப்படாத மற்றும் காலியாக உள்ள பதவியிடங்களுக்கான தற்செயல் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் 09.10.2021 அன்று அமைதியான முறையில் நடைபெற்றது.
இந்த வாக்குப்பதிவில் மேற்படி மாவட்டங்களில் கீழ்க்கண்டவாறு வாக்குகள் பதிவாகியுள்ளன.
- காஞ்சிபுரம் 72.33%
- செங்கல்பட்டு 75.51%
- வேலூர் 81.07%
- ராணிப்பேட்டை 82.52%
- திருப்பத்தூர் 77.85 %
- விழுப்புரம் 85.31%
- கள்ளக்குறிச்சி 82.59%
- திருநெல்வேலி 69.34%
- தென்காசி 73.35 %