இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி காவல் நிலைய சரகம், பெங்களூரு–சென்னை தேசிய நெடுஞ்சாலை, அரப்பாக்கம் அருகே அமைக்கப்பட்டிருந்த காவல் சோதனைச்சாவடியில், ஆற்காடு நகர் வட்ட காவல் ஆய்வாளர் தலைமையில் நேற்று (டிச. 06) வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த சரக்கு வேன் இரும்புத் தடுப்பு மீது மோதியதில், தடுப்பின் மறுபுறம் நின்றிருந்த காவலர் அய்யனமூர்த்தி என்பவர் பலத்த காயமடைந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
பணியின்போது உயிரிழந்த காவலர் அய்யனமூர்த்தியை இழந்துவாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.