திருவள்ளூர் : சென்னையில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலும் ஒன்று. இங்கு சென்னை புறநகர் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள், பெங்களூரு, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்த நிலையில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அளிக்கும் காணிக்கைகளை கோயில் அலுவலர்கள் முன்னிலையில் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை எண்ணுவது வழக்கம்.
இந்த நிலையில் திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் உள்ள உண்டியல்களில் பக்தர்கள் அளித்த காணிக்கை இன்று (நவ.23) எண்ணப்பட்டது. இதில் ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டு பக்தர்கள் அளித்த காணிக்கைகளை எண்ணினார்கள்.