தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கேட்பாராற்று கிடந்த நகைகள் ஒப்படைப்பு: இளைஞர்களின் நேர்மைக்கு சல்யூட்! - சாலையில் கிடந்த நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞர்கள்

சாலையில் கேட்பாரற்று கிடந்த தங்க நகைகளை ஒப்படைத்த இளைஞர்களின் நேர்மைக்கு காவல் துறையினர் பாராட்டுத் தெரிவித்தனர்.

கேட்பாராற்று கிடந்த நகைகள் ஒப்படைப்பு
கேட்பாராற்று கிடந்த நகைகள் ஒப்படைப்பு

By

Published : Sep 20, 2021, 9:20 AM IST

சென்னை: பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனை அருகே உள்ள பழச்சாறு கடையின் பக்கத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு ஐடியில் பணிபுரியும் இரண்டு இளைஞர்கள் பழச்சாறு அருந்தச் சென்றுள்ளனர்.

பழச்சாறு அருந்திவிட்டு விடுதிக்குச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தை எடுக்க வந்தபோது வாகனத்தின் அருகில் தங்க நகைகள் சிதறிக் கிடந்தன. நகைகளை எடுத்து அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது யாருக்கும் தெரியவில்லை.

நகைகள்

உடனே அங்கிருந்த நகைகளை எடுத்துக் கொண்டு இருவரும் பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதில் மூன்று சவரன் தங்கச் சங்கிலி, ஒரு சவரன் பிரேஸ்லெட், இரண்டு மோதிரங்கள் இருந்தன.

விசாரணையில் இருவரும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சீனுவாசன் (25), திண்டுக்கல்லைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (23) என்பதும், விடுதியில் தங்கி ஐடி நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்துவருவதும் தெரியவந்தது.

கேட்பாராற்று கிடந்த நகைகள் ஒப்படைப்பு

கேட்பாரற்று கிடந்த தங்க நகைகளை நேர்மையாக ஒப்படைத்த இளைஞர்களைப் பெரும்பாக்கம் காவல் துறையினர் பாராட்டினர்.

இதையும் படிங்க: நீட் சமூக நீதியை நிலைநாட்டும் தேர்வு!

ABOUT THE AUTHOR

...view details