தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தடுப்பூசி போடலனா சம்பளம் இல்ல - மின்சார வாரியம் கொடுத்த ஷாக் - மதுரையின் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்

மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் டிசம்பர் 7ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்ற உத்தரவால் பணியாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Tamil Nadu Generation and Distribution Corporation Limited, TANGEDCO, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், tangedco CIRCULAR ABOUT NO SALARY FOR NON VACCINATED EB STAFFS
Tamil Nadu Generation and Distribution Corporation Limited

By

Published : Dec 2, 2021, 12:55 PM IST

Updated : Dec 2, 2021, 1:03 PM IST

சென்னை:கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், "மதுரை மண்டலம் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், "மின்பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் வரும் டிசம்பர் 7ம் தேதிக்குள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.

அவ்வாறு தடுப்பூசி செலுத்தி கொள்ளாத பணியாளர்களுக்கு டிசம்பர் மாத ஊதியம் நிறுத்தம் செய்யப்படும்" என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பணியாளர்கள் தவறாமல் தடுப்பூசி செலுத்தி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேசமயம், மருத்துவ காரணங்களுக்கு தடுப்பூசி செலுத்தாதவர்கள் மருத்துவ அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Last Updated : Dec 2, 2021, 1:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details