தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வரும் 22,23,24ஆம் தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழை - வானிலை ஆய்வு மையம்

நாளை மறுநாள் முதல் 24ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

By

Published : Mar 20, 2022, 9:21 PM IST

நாளை மறுநாள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழை- வானிலை ஆய்வு மையம்
நாளை மறுநாள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழை- வானிலை ஆய்வு மையம்

சென்னை:நாளை மறுநாள் (பிப்ரவரி 22) முதல் 24ஆம் தேதி வரை, தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

"வளி மண்டல மேலடுக்குச்சுழற்சி காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் முதல் 24ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

மாவட்ட ரீதியாக மழை அளவு

கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணராயபுரம் (கரூர்) 3, நெடுங்கல் (கிருஷ்ணகிரி), ஆரணி (திருவண்ணாமலை), மாயனூர் (கரூர்), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), ஆரணி ஏஆர்ஜி (திருவண்ணாமலை) தலா 2, பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), கில் கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி) தலா 1 மழை அளவு பதிவாகியுள்ளது.

மேலும் நேற்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது. இது வடக்குத் திசையில் அந்தமான் நிக்கோபார் தீவு வழியாக நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனை அடுத்த 12 மணி நேரத்தில் புயலாகவும் வலுபெறக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

மீனவர்களுக்கான எச்சரிக்கை

நாளை(பிப்ரவரி 21) அந்தமான் கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இப்பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்" எனக் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் கரோனா 4ஆவது அலை? - மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த சுகாதாரச் செயலாளர்

ABOUT THE AUTHOR

...view details