சென்னை:விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் கூடுதலாகப் பேருந்துகளை இயக்க ஏற்பாடுசெய்துள்ளது. இது குறித்து போக்குவரத்துக் கழகம், "இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி வார இறுதி நாளில் வருவதால், அந்நாளை தொடர்ந்து இரண்டு நாள்கள் விடுமுறையாகும்.
இதன் காரணமாக, சென்னையிலிருந்து அதிகப்படியான மக்கள் சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிடுவார்கள். அவர்களுக்காக அரசுப் போக்குவரத்துக் கழகம் 1,000 சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளது. அதன்படி சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,250 பேருந்துகளோடு, இந்தச் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும்.