தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 18, 2020, 4:29 PM IST

ETV Bharat / city

8,047 கிமீ சாலைகள் மேம்பாடு - சட்டப்பேரவையில் தகவல்

சென்னை: ஆசிய வளர்ச்சி வங்கி கடனுதவி மூலம் 8,047 கிமீ சாலைகள் மேம்படுத்தப்பட உள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

roads
roads

அத்துறை வெளியிட்டுள்ள விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவை:

சென்னை-கன்னியாகுமரி தொழிற்தட திட்டமானது மத்திய அரசு, ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் உதவி மூலம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் கடலூர்-நாகை, அரியலூர்-பெரம்பலூர், திருச்சி-புதுக்கோட்டை-சிவகங்கை, மதுரை-திண்டுக்கல்-விருதுநகர்-தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி-திருநெல்வேலி ஆகிய ஆறு தொழில் முனையங்கள் உருவாக்கப்படுகின்றன.

பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கான இந்தத் திட்டமானது 13 கடலோர மாவட்டங்கள், 11 உள் மாவட்டங்கள் என 24 மாவட்டங்களை உள்ளடக்கியதாக உள்ளது.

இந்தத் திட்டத்தில் சாலை உள்கட்டமைப்பு வசதியின் கீழ் 4,318 கிமீ தேசிய நெடுஞ்சாலை, 3,729 கிமீ மாநில நெடுஞ்சாலை என மொத்தம் 8,047 கிமீ சாலையை ஆறு கட்டங்களாக மேம்படுத்தப்படவுள்ளன. முதற்கட்டமாக 20 மாவட்டங்களில் 15 முக்கிய இணைப்புச் சாலைகள் மேம்படுத்தப்பட உள்ளன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல மற்றொரு அறிவிப்பில், எண்ணூர்-காட்டுப்பள்ளி துறைமுகத்தை இணைக்கும் வகையில் உள்கட்டமைப்பை ஏற்படுத்தி, சென்னை எல்லைச் சாலையை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தச் சாலையானது எண்ணூர் துறைமுகம்-மாமல்லபுரம் பூஞ்சேரி சந்திப்பு வரை அமைக்கப்படும். புதிய நேர்பாட்டில் 97.47 கிமீ சாலை, 35.91 கிமீ பயன்பாட்டில் உள்ள சாலை என மொத்தம் 133.38 கிமீ சாலை உருவாக்கப்பட உள்ளது.

சாலையின் செயல்திறன், பாதுகாப்பை மேம்படுத்துவது, பாதுகாக்கப்பட்ட அணுகு சாலை, நுண்ணறிவுப் போக்குவரத்து அமைப்பு ஆகியவை இந்தச் சாலையில் அமைக்கப்போவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:950 கோடியில் 4,865 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன - முதலமைச்சர் பழனிசாமி

ABOUT THE AUTHOR

...view details