தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டை குழந்தை நேய மாநிலமாக மாற்ற வேண்டும் - அமைச்சர் கீதா ஜீவன் - ஜோ கடற்கரை வளாகத்தில்

குழந்தைகளுக்கு எதிரான வன்முறை இல்லாத மாநிலமாக, குழந்தை நேய மாநிலமாக தமிழ்நாட்டினை சிறக்கச் செய்ய வேண்டும் என அமைச்சர் பி. கீதா ஜீவன் கூறியுள்ளார்.

Etv Bharatதமிழ்நாட்டை குழந்தை நேய மாநிலமாக மாற்ற வேண்டும் - அமைச்சர் கீதா ஜீவன்
Etv Bharatதமிழ்நாட்டை குழந்தை நேய மாநிலமாக மாற்ற வேண்டும் - அமைச்சர் கீதா ஜீவன்

By

Published : Aug 31, 2022, 12:11 PM IST

சென்னை:தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் இருந்து 13 முதல் 17 வயதுக்குட்பட்ட 30 வளரிளம் பருவ பெண்கள் மற்றும் 20 வளரிளம் பருவ ஆண்களுக்கென ஐந்து நாள் பயிற்சி ஆக.29ஆம் தேதி முதல் செப்டம்பர் 2ஆம் தேதிவரை செங்கல்பட்டு மாவட்டம், ECR சாலையில் உள்ள பட்டிப்புலம் கிராமத்தில் அமைந்துள்ள ஜோ கடற்கரை வளாகத்தில் (JOE Beach Resort) நடைபெறுகிறது.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் நேற்று (ஆக. 30) இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பயிற்சி பெறும் வளரிளம் பெண்கள் மற்றும் ஆண்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி, வாழ்த்து தெரிவித்து ஊக்குவித்தார். அமைச்சர், தனது உரையின்போது,"இந்த 50 வளரிளம் பருவத்தினர், மற்றவர்களுக்கு தாங்கள் கற்றதை தெரிவித்து, 6 மாத காலத்திற்குள் இந்த 50 பேர் 5 ஆயிரம் பேராக உருவாகி, மிகப்பெரிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தி குழந்தைகளுக்கு எதிரான வன்முறை இல்லாத மாநிலமாக, குழந்தை நேய மாநிலமாக தமிழ்நாட்டினை சிறக்கச் செய்ய வேண்டும்" என்றார்.

தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டு வரும் திட்டத்தின் ஒரு பகுதியாக, அறிவுத் திறன் மதிப்பீடுகள் மற்றும் மனப்பான்மை ஆகியவற்றில், ஆற்றலூட்டும் பயிற்சியின் மூலம் 50 இளம் பருவத்தினரை குழந்தைகளின் உரிமைகளுக்கான சாதனையாளர்களாக உருவாக்குவதற்காக மாநில அளவிலான பயிற்சியை ஒருங்கிணைத்திருக்கிறது.

வளரிளம் பருவ ஆண்களுக்கென ஐந்து நாள் பயிற்சி

இப்பயிற்சியின் நோக்கமானது வளரிளம் பருவத்தினர் தங்களின் உரிமைக்கான முகவர்களாகவும், துணிந்து நிற்கும் சாதனையாளர்களாகவும், சக குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரின் உரிமைக்காக தூணாக நிற்பதற்கும் அதிகாரமளிப்பது, வளரிளம் பருவத்தினரை சமூகத்தின் முன்மாதிரியாக உருவாக்குவதாகும்.

அறிவு, திறன் மதிப்பீடுகள் மற்றும் மனப்பான்மை ஆகியவற்றில் ஆற்றலூட்டும் பயிற்சியின் மூலம் 50 இளம் பருவத்தினரை குழந்தைகளின் உரிமைகளுக்கான சாதனையாளர்களாக மாற்றுவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஷம்பு கல்லோலிக்கர், சமூகப் பாதுகாப்புத்துறை இயக்குநர் ச. வளர்மதி, மற்றும் யுனிசெஃப் நிறுவனத்தின் குழந்தைகள் பாதுகாப்புக்கான சமூகக் கொள்கை நிபணர் ஜி. குமரேசன் மற்றும் துறையின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:38 மாவட்டங்களில் வெள்ள அபாய தடுப்பு ஒத்திகை பயிற்சி - தமிழ்நாடு அரசு

ABOUT THE AUTHOR

...view details