தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா பரிசோதனை மேற்கொள்ள புதிய வழிகாட்டுதல் நெறிமுறை - கரோனா பரிசோதனை மேற்கொள்ள புதிய வழிகாட்டுதல் நெறிமுறை

கரோனா பரிசோதனை மேற்கொள்ள புதிய வழிகாட்டுதல் நெறிமுறையைத் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ளார்.

கரோனா பரிசோதனை மேற்கொள்ள புதிய வழிகாட்டுதல் நெறிமுறை
கரோனா பரிசோதனை மேற்கொள்ள புதிய வழிகாட்டுதல் நெறிமுறை

By

Published : Feb 17, 2022, 9:07 PM IST

சென்னை:கோவிட் தொற்று பரிசோதனை குறித்த திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”சளி காய்ச்சல் தொண்டை வலி மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் கொண்ட நபர்கள் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

60 வயதிற்கு மேற்பட்ட சர்க்கரை நோய் உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகப் பிரச்சினை உடையவர்கள், உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள், கோவிட் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்பவர்கள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும் வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் இந்தியா வருபவர்களில் இரண்டு விழுக்காட்டினர் ரேண்டம் (சமவாய்ப்பு) முறையில் பரிசோதிக்கப்படுவர்.

வணிக வளாகங்கள், சந்தைப் பகுதிகள், பேருந்து, ரயில் நிலையங்கள் போன்ற இடங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு சமவாய்ப்பு முறையில் 50 வயதிற்கு மேற்பட்டவர்களும், இணை நோய் உள்ளவர்களும் பரிசோதிக்கப்படுபவர்.

அரசு ஆரம்ப சுகாதார நிறுவனங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிறுவனங்கள், அனைத்து வட்டார மருத்துவமனைகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

கரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான வழிமுறைகளை தனியார் மருத்துவமனைகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பொய்க்கால் குதிரை ஆட்டத்துடன் நிறைவடைந்த இறுதிகட்ட பரப்புரை

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details