சென்னை:அறநிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், இத்துறையின் அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "சட்டப்படியான உரிமை இல்லாமல் ஆக்கிரமிப்புச் செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்டப்பூர்வமான வாடகை ஒப்பந்தமின்றி, உரிய வாடகை செலுத்தாமல் ஆக்கிரமிப்பு செய்து, அனுபவித்துவரும் நபர்கள் மீது இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ள, காவல் நிலையத்தில் முறையாகப் புகார் அளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.