சென்னை:சென்னையில் ராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகர், இளங்கோவன் தெருவில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அதிகாரிகள் ஆர்.ஏ புரத்தில் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட போது, எதிர்ப்பு தெரிவித்து அதே பகுதியில் 30 ஆண்டுகளாக வசித்து வந்த கண்ணையன் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ மயிலை வேலு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு அரசு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.